
Wednesday, November 12, 2008
Saturday, November 8, 2008
நினைவிருக்கிறதா உனக்கு?

ஓ! என் நண்பனே....
முகவரி மாறி
மறந்து போன உனக்கு
இக்கடிதமெழுதி
காற்றலையில் விடுகிறேன்!
நினைவிருக்கிறதா உனக்கு?
வாடகை சைக்கிள் வாங்கி
குரங்கு பெடல் போட்டது,
தாமரைக்குளத்தில்
மூங்கு நீச்சல் போட்டது,
தென்னைமரமேறி
நெஞ்சு சிராய்ப்போடு
இள நீர் குடித்தது,
பம்பர விளையாட்டில்
அடித்துக்கொண்டது,
உப்புத்தொட்டு
மாங்காய் கடித்தது,
புது பேண்ட் போட்டு
ஊரைச்சுற்றியது,
கோவில் கட்டி
சாமி தூக்கியது,
ஆம் நண்பா உறங்கா
இந்த நினைவுகள்
உயிர்ப்போடு
வைத்திருக்கின்றன
நம் நட்பை.
நானும் நம் கிராமமும்
உன்னைப்போல் மாறிவிடாமல்
காத்திருக்கிறோம்.....
என்றேனும் ஒரு நாள்
உன் நினைவலைகளில்
என் ஞாபகம் வந்தால்
ஒரு முறை வந்து போ
வாழ்க்கையையும்
நட்பையும் புதுப்பிக்கலாம்!!!
.
Subscribe to:
Posts (Atom)





