Friday, November 7, 2008

கடற்கரை காலடிச்சுவடுகள்....




நீயும் நானும் நடந்த
புல் வெளி செடிகள்
பூ பூத்து உதிர்கின்றன!



உன்னோடு உலவிய
கடற்கரை காலடிச்சுவடுகள்
காற்றடித்து கலைகின்றன!



உனக்காக எழுதிய கடிதங்கள்
சிரிக்கின்றன என்னைப் பார்த்து!



எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!



ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு!



நீ கண்கள் மூடி
காதல் முறித்து செல்கிறாய்!



நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!



.

13 comments:

குடுகுடுப்பை said...

//நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!//

இனிமே ஒரே கவிதை தானா?

ஆயில்யன் said...

//ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;//
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு!//

வாவ்!

எப்பிடி தம்பி !!!!!!

என்ன தம்பி ஆச்சு திடீருன்னு காதல் டெரராகிட்ட மாதிரி தெரியுது?

சந்தனமுல்லை said...

ரொம்ப நல்லாருக்குங்க..செம பீலீங்ஸ் போல!! :-))

சந்தனமுல்லை said...

//நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!//

எவ்வளவு நாளைக்கு?

தமிழ் அமுதன் said...

யே....அப்போவ்...பெரிய
காதல் மன்னனா இருந்து
இருப்பிங்க போல இருக்கே!

ராமலக்ஷ்மி said...

//உன்னோடு உலவிய
கடற்கரை காலடிச்சுவடுகள்
காற்றடித்து கலைகின்றன!//

அருமை.

//ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு!//

இதுவும்.

வாழ்த்துக்கள் சுடர்மணி.

அன்புடன் அருணா said...

//எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!//

நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!

எப்பிடிப்பா இதெல்லாம்???? ரொம்ப அழகு ஒவ்வொரு வரியும்.....என்னால் இப்பிடி எழுதமுடியவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது...
அன்புடன் அருணா

MSK / Saravana said...

//எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!//

ரொம்ப பீலிங்க்ஸா இருக்கே.. :(

Naresh said...

//எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!


ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு!//

அருமையான வரிகள்

அதென்னமோ காதல் கவிதைகளைப் படிப்பதில் மட்டும் சலிப்பே வருவதில்லை.....

Princess said...

//ரோஜாவை பார்க்கும் போது
முட்கள் தெரிவதில்லை;
உன் புன்னகை பின்னிருந்த
கண்ணீர் தெரியவில்லை எனக்கு//

அருமை

//எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!//

மனசை ஏதோ பண்ணுது இந்த வரிகள்.. :(

coolzkarthi said...

நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!
fantastic...

நாணல் said...

//எனது கண்ணீர் உனக்கு
வேடிக்கையாக இருக்கலாம்
எனக்கு வாழ்க்கையாக இருக்கிறது!//

நல்லா இருக்கே..

//நான் கவலை சுமந்து
கவிதை ஜனித்து
திரிகிறேன்!!!//

:( (சோகாத்துக்கு இந்த சோக smiley)

அப்ப இனி நிறைய கவிதைகளை எதிர்ப்பார்ககலாம்னு சொல்லுங்க...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு.