Friday, September 26, 2008

காதல் கிறுக்கல்கள்

1. நான் என்ன கிறுக்கினாலும்
கவிதையாகி விடுகிறது,
கிறுக்கியது உன்னைப்ப்ற்றி
என்பதாலோ!

2. எந்த வாள்வீச்சும்
தோற்றுப்போகும்
உந்தன் விழிவீச்சின் முன்.

3. எந்தன் இதய கூட்டில்
கண்னெறிந்து போகிறாய்
கண்ணாடி வீட்டில்
கல்லெறிவதைப்போல...

4. நீ சிரித்துக்கொண்டிருக்கிறாய்
நான்
முத்துக்குளிக்கிறேன்..

5. எப்போதும் வாடாத
பூக்கள்
உந்தன்
சுடிதார் சோலையில்...

6. உன் வீடு கடக்கும் போதெல்லாம்
தலை திரும்புவது
அனிச்சை செயலாகி விட்டதெனக்கு...

7. நான் உன்னை கேலி
செய்யும் போதெல்லாம்
சிரித்துக்கொண்டெ ஓடுகிறாய்,
உன்னை என்னிடம்
விட்டுவிட்டு...


பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் தட்டுங்க..

11 comments:

ஆயில்யன் said...

:))))))

ஆயில்யன் said...

//நான் உன்னை கேலி
செய்யும் போதெல்லாம்
சிரித்துக்கொண்டெ ஓடுகிறாய்,
உன்னை என்னிடம்
விட்டுவிட்டு...//

அடேய்யப்பா!

எனக்கு தெரிஞ்சு கேலி செஞ்ச ஆளுங்க நல்லா வாங்கிகட்டிக்கிட்டதுண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன்! (லைக் செருப்பு பிய்யும்!)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

" (லைக் செருப்பு பிய்யும்!)"

அது வேற மாதிரி காதல்ங்ண்ணா, இது புனிதமான காதல்ங்ண்ணா...

குடுகுடுப்பை said...

//பிடிச்சிருந்தா ஒரு பின்னூட்டம் தட்டுங்க..//

எனக்கு எந்தக்காலத்லயும் கவிதையும், பொன்னுங்களும் புரியப்போறதில்லை. மேல நீங்க சொன்னதுக்கு எனக்கு கெடயாது

MSK / Saravana said...

//6. உன் வீடு கடக்கும் போதெல்லாம்
தலை திரும்புவது
அனிச்சை செயலாகி விட்டதெனக்கு...

7. நான் உன்னை கேலி
செய்யும் போதெல்லாம்
சிரித்துக்கொண்டெ ஓடுகிறாய்,
உன்னை என்னிடம்
விட்டுவிட்டு...//

கலக்கல்.. அருமையா இருக்கிறது.. :)

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

""எனக்கு எந்தக்காலத்லயும் கவிதையும், பொன்னுங்களும் புரியப்போறதில்லை. மேல நீங்க சொன்னதுக்கு எனக்கு கெடயாது""

இந்த ரெண்டையும் புரிந்துகொள்வதில்தான் சுகமே இருக்கு...

வருகைக்கு நன்றி திரு.குடுகுடுப்பையார் அவர்களே...

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாங்க திரு.சரவணகுமார். முதல் வருகைக்கும் முதல் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

அபி அப்பா said...

நல்லா இருக்குப்பா கவிதை!! கீப்பு வச்சிக்கோ சாரி சாரி கீப் இட் அப்:-))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

"" கீப் இட் அப்:-))""

வாங்கண்ணா, வணக்கம். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...

Unknown said...

வாவ் அண்ணா சூப்பரா இருக்கு கவிதை எல்லாமே..!! :))

//உன் வீடு கடக்கும் போதெல்லாம்
தலை திரும்புவது
அனிச்சை செயலாகி விட்டதெனக்கு...//

Especially these lines..!! :))

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

வாவ் அண்ணா சூப்பரா இருக்கு கவிதை எல்லாமே..!! :))

டேங்க்சுங்க அக்கா....
அப்புறம் நீங்க சீனியர், நான் உங்கள அக்கான்னு கூப்பிடுறேன் சரியா?